திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

3ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி

3057

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை

முதலைச் சிறைப்பட்டு நின்ற

கைம்மா வுக்கருள் செய்த

கார்முகில் போல்வண்ணன் கண்ணன்

எம்மா னைச்சொல்லிப் பாடி

எழுந்தும் பறந்தும்துள் ளாதார்

தம்மால் கருமமென் சொல்லீர்

தண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1

 

3058

தண்கடல் வட்டத்துள் ளாரைத்

தமக்கிரை யாத்தடிந் துண்ணும்

திண்கழற் காலசு ரர்க்குத்

தீங்கிழைக் கும்திரு மாலை

பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்

பறந்தும் குனித்துழ லாதார்

மண்கொள் உலகில் பிறப்பார்

வல்வினை மோத மலைந்தே. 3.5.2

 

3059

மலையை யெடுத்துக்கல் மாரி

காத்துப் பசுநிரை தன்னை

தொலைவு தவிர்த்த பிரானைச்

சொல்லிச்சொல் லிநிறெப் போதும்

தலையினோ டாதனம் தட்டத்

தடுகுட்ட மாய்ப்பற வாதார்

அலைகொள் நரகத் தழுந்திக்

கிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3

 

3060

வம்பவிழ் கோதை பொருட்டா

மால்விடை யேழும் அடர்த்த

செம்பவ ளத்திரள் வாயன்

சிரீதரன் தொல்புகழ் பாடி

கும்பிடு நட்டமிட் டாடிக்

கோகுகட் டுண்டுழ லாதார்

தம்பிறப் பால்பய னென்னே

சாது சனங்க ளிடையே? 3.5.4

 

3061

சாது சனத்தை நலியும்

கஞ்சனைச் சாதிப்ப தற்கு

ஆதியஞ் சோதி யுருவை

அங்குவைத் திங்குப் பிறந்த

வேத முதல்வனைப் பாடி

வீதிகள் தோறும்துள் ளாதார்

ஓதி யுணர்ந்தவர் முன்னா

என்சவிப் பார்ம னிசரே? 3.5.5

 

3062

மனிசரும் மற்றும் முற்றுமாய்

மாயப் பிறவி பிறந்த

தனியன் பிறப்பிலி தன்னைத்

தடங்கடல் சேர்ந்த பிரானை

கனியைக் கரும்பினின் சாற்றைக்

கட்டியைத் தேனை அமுதை

முனிவின்றி ஏத்திக் குனிப்பார்

முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6

 

3063

நீர்மை நூற்றுவர் வீய

ஐவர்க் கருள்செய்து நின்று

பார்மல்கு சேனை அவித்த

பரஞ்சுட ரைநினைந் தாடி.

நீர்மல்கு கண்ணின ராகி

நெஞ்சம் குழைந்துநை யாதே

ஊர்மல்கி மோடு பருப்பார்

உத்தமர்க்கட் கென்செய் வாரே? 3.5.7

 

3064

வார்ப்புனல் அந்தண் ணருவி

வடதிரு வேங்கடத் தெந்தை

பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்

பித்தரென் றேபிறர் கூற

ஊர்ப்பல புக்கும் புகாதும்

உலோகர் சிரிக்கநின் றாடி

ஆர்வம் பெருகிக் குனிப்பார்

அமரர் தொழப்படு வாரே. 3.5.8

 

3065

அமரர் தொழப்படு வானை

அனைத்துல குக்கும் பிரானை

அமரர் மனத்தினுள் யோகு

புணர்ந்தவன் தன்னோடொன் றாக

அமரத் துணியவல் லார்கள்

ஒழியஅல் லாதவ ரெல்லாம்

அமர நினைந்தெழுந் தாடி

அலற்றுவ தேகரு மமே. 3.5.9

 

3066

கருமமும் கரும பலனும்

ஆகிய காரணன் தன்னை

திருமணி வண்ணனைச் செங்கண்

மாலினைத் தேவ பிரானை

ஒருமை மனத்தினுள் வைத்து

உள்ளங் குழைந்தெழுந் தாடி

பெருமையும் நாணும் தவிர்ந்து

பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10

 

3067

தீர்ந்த அடியவர் தம்மைத்

திருத்திப் பணிகொள்ள வல்ல

ஆர்ந்த புகழச் சுதனை

அமரர் பிரானையெம் மானை

வாய்ந்த வளவயல் சூழ்தண்

வளங்குரு கூர்ச்சடகோபன்

நேர்ந்தவோ ராயிரத் திப்பத்

தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11

Leave a Reply