திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

4ஆம் பத்து 8 ஆம் திருவாய்மொழி

3200

ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்

கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை

நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட

மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. (2) 4.8.1

 

3201

மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்

அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்

பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட

மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 4.8.2

 

3202

மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி

விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி

படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்

நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 4.8.3

 

3203

நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை

பொறையினால் முலையணைவான்பொருவிடைஏழ் அடர்த்துகந்த

கறையினார் துவருடுக்கைகடையாவின் கழிகோல்கை

சறையினார் கவராததளிர்நிறத்தால் குறைவிலமே. 4.8.4

 

3204

தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற

கிளிமொழியாள் காரணமாக்கி ளரரக்கன் நகரெரித்த

களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து

அளிமிக்கான் கவராதஅறிவினால் குறைவிலமே. 4.8.5

 

3205

அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய

நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி

குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட

கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 4.8.6

 

3206

கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து

கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த

வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல

வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே. 4.8.7

 

3207

வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை

எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த

தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்

விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே. 4.8.8

 

3208

மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்

போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து

நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க

யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே. 4.8.9

 

3209

உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்

கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த

தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்

உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே. 4.8.10

 

3210

உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி

தயிர்வெண்ணெ யுண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்

செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்

வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 4.8.11

Leave a Reply