பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

முதற்பத்து

முதல் திருமொழி – வண்ண மாடங்கள்

(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)

கலிவிருத்தம்

1ம் பத்து 1ம் திருமொழி

13:

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்

எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்

கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.

 

14:

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்

நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்

பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று

ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.

 

15:

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்

காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்

ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு

வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.

 

16:

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்

நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்

செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.

 

17:

கொண்டதாளுறி கோலக்கொடுமழு

தண்டினர் பறியோலைச்சயனத்தர்

விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்

அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.

 

18:

கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்

ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட

வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.

 

19:

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்

ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்

பாயசீருடைப் பண்புடைப்பாலகன்

மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.

 

20:

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்

எத்திசையும் சயமரம்கோடித்து

மத்தமாமலை தாங்கியமைந்தனை

உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.

 

21:

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்

எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்

ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன் நங்காய். 9.

 

22:

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்

மன்னுநாரணன் நம்பிபிறந்தமை

மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்

பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10.

 

 

Leave a Reply