பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

நான்காம் திருமொழி – தன் முகத்து

(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)

கலிநிலைத்துறை

 

54:

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்

பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்

என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.

நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.

 

55:

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்

தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்

அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்

மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.

 

56:

சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்

எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்

வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற

கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.

 

57:

சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து

ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்

தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே

மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.

 

58:

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா

மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்

குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்

புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.

 

59:

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்

கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்

உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்

விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.

 

60:

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்

ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்

மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்

மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.

 

61:

சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்

சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்

சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்

நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.

 

62:

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய

பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்

ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்

வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

 

63:

மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை

ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்

வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை

எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.

 

 

 

Leave a Reply