பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு

(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

64:

உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.

ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்

பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.

பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.

செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்

செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக

ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1.

 

65:

கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்

குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.

மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி

மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர

காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்

கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.

ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2.

 

66:

நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.

நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்

தம்மனையானவனே. தரணிதலமுழுதும்

தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்

விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்

விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.

அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3.

 

67:

வானவர்தாம்மகிழவன்சகடமுருள

வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.

கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்

கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.

தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்

என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்

ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.

 

68:

மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்

வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு

ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை

ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.

முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்

முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய

அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5.

 

69:

காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.

கானகமாமடுவில்காளியனுச்சியிலே

தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.

துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.

ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை

அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.

ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6.

 

70:

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்

தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய

நப்பினைதன்திறமாநல்விடையேழவிய

நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.

தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்

தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்

அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.

 

71:

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி

உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்

கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்

கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி

மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்

சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.

என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8.

 

72:

பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்

பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர

கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்

கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக

நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே

நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ

ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9.

 

73:

செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்

சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்

தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்

பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்

மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்

மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக

எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை

ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10.

 

74:

அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்

ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.

என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை

ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று

அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு

ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்

இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்

எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11.

 

 

 

Leave a Reply