பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

 

 

நாலாம் திருமொழி – வெண்ணெயளைந்த

(கண்ணனை நீராட அழைத்தல்.)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

152:

வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு

திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்

எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்

நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1.

 

153:

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்

தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்

நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம்

இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2.

 

154:

பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்

ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்

காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்

வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3.

 

155:

கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து

வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே.

மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்

அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4.

 

156:

அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து

சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.

செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்

சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5.

 

157:

எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி

கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே.

உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே

வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6.

 

158:

கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்

பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே.

சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே

மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7.

 

159:

கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து

பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்

நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள்

நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8.

 

160:

பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி

காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்

நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்

மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9.

 

161:

கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து

வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை

பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்

சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2) 10.

 

 

Leave a Reply