பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

நான்காம் திருமொழி – தழைகளும்

 

(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

254:

தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்

தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி

குழல்களும்கீதமுமாகிஎங்கும்

கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு

மழைகொலோவருகின்றதென்றுசொல்லி

மங்கைமார்சாலகவாசல்பற்றி

நுழைவனர்நிற்பனராகி எங்கும்

உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2) 1.

 

255:

வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு

வசையறத்திருவரைவிரித்துடுத்து

பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப்

பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே

முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்

அணிந்து பல்லாயர்குழாம்நடுவே

எல்லியம்போதாகப்பிள்ளைவரும்

எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2.

 

256:

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்

மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட

ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி

ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்

வருகையில்வாடியபிள்ளைகண்ணன்

மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்

அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்

அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3.

 

257:

குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்

கோவலனாய்க்குழலூதியூதி

கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு

கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு

என்றும்இவனையொப்பாரைநங்காய்

கண்டறியேன்ஏடி. வந்துகாணாய்

ஒன்றும்நில்லாவளைகழன்று

துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4.

 

258:

சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்

சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து

பற்றிநின்றுஆயர்கடைத்தலையே

பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்

மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்

மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்

கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்

கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.

 

259:

சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்

திருத்தியகோறம்பும்திருக்குழலும்

அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்

வருமாயரோடுஉடன்வளைகோல்வீச

அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை

அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்

பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப்

பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6.

 

260:

சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்

தன்திருமேனிநின்றொளிதிகழ

நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து

பல்லாயர்குழாம்நடுவே

கோலச்செந்தாமரைக்கண்மிளிரக்

குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு

ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை

அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7.

 

261:

சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்

திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்

அந்தரமின்றித்தன்னெறிபங்கியை

அழகியநேத்திரத்தாலணிந்து

இந்திரன்போல்வருமாயப்பிள்ளை

எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன

சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்

துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8.

 

262:

வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து

மல்லிகைவனமாலைமௌவல்மாலை

சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்

தீங்குழல்வாய்மடுத்தூதியூதி

அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை

அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு

விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்

வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9.

 

263:

விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ

மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே

கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு

இளவாய்க்கன்னிமார்காமுற்ற

வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்

விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்

பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்

பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 10.

Leave a Reply