பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

ஒன்பதாம் திருமொழி – மரவடியை

(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

412:

மரவடியைத்தம்பிக்குவான்பணையம்

வைத்துப்போய்வானோர்வாழ

செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து

உலகாண்டதிருமால்கோயில்

திருவடிதன்திருவுருவும்

திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று

உருவுடையமலர்நீலம்

காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. (2) 1.

 

413:

தன்னடியார்திறத்தகத்துத்

தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்

என்னடியார்அதுசெய்யார்

செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்

மன்னுடையவிபீடணற்கா

மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த

என்னுடையதிருவரங்கற்கன்றியும்

மற்றொருவர்க்குஆளாவரே? (2) 2.

 

414:

கருளுடையபொழில்மருதும்

கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்

உருளுடையசகடரையும்மல்லரையும்

உடையவிட்டுஓசைகேட்டான்

இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு

ஏற்றிவைத்துஏணிவாங்கி

அருள்கொடுத்திட்டுஅடியவரை

ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3.

 

415:

பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய

துவரையென்னும்

அதில்நாயகராகிவீற்றிருந்த

மணவாளர்மன்னுகோயில்

புதுநாண்மலர்க்கமலம்

எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்

பொதுநாயகம்பாவித்து

இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4.

 

416:

ஆமையாய்க்கங்கையாய்

ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்

நான்முகனாய்நான்மறையாய்

வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்

சேமமுடைநாரதனார்

சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்

பூமருவிப்புள்ளினங்கள்

புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5.

 

417:

மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து

அவர்களையேமன்னராக்கி

உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட

உயிராளன்உறையும்கோயில்

பத்தர்களும்பகவர்களும்

பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்

சித்தர்களும்தொழுதிறைஞ்சத்

திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6.

 

418:

குறட்பிரமசாரியாய்

மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி

இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை

கொடுத்துகந்தஎம்மான்கோயில்

எறிப்புடையமணிவரைமேல்

இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்

சிறப்புடையபணங்கள்மிசைச்

செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7.

 

419:

உரம்பற்றிஇரணியனை

உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி

சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க

வாயலரத்தெழித்தான்கோயில்

உரம்பெற்றமலர்க்கமலம்

உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட

வரம்புற்றகதிர்ச்செந்நெல்

தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8.

 

420:

தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்

அரியாய்க்குறளாய்

மூவுருவினிராமனாய்க்

கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்

சேவலொடுபெடையன்னம்

செங்கமலமலரேறிஊசலாடி

பூவணைமேல்துதைந்தெழு

செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9.

 

421:

செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்

செருச்செய்யும்நாந்தகமென்னும்

ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்

விழுக்கையாளன்

இரவாளன்பகலாளன்என்னையாளன்

ஏழுலகப்பெரும்புரவாளன்

திருவாளன்இனிதாகத்

திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10.

 

422:

கைந்நாகத்திடர்கடிந்த

கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்

தென்னாடும்வடநாடும்தொழநின்ற

திருவரங்கம்திருப்பதியின்மேல்

மெய்ந்நாவன்மெய்யடியான்

விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்

எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்

இணைபிரியாதிருப்பர்தாமே. (2) 11.

Leave a Reply