முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் அருளிச்செய்த

முதல் திருவந்தாதி

தனியன்

முதலியாண்டான் அருளிச்செய்தது

 

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,

பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, – வையத்து

அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,

படிவிளங்கச் செய்தான் பரிந்து

 

முதல் திருவந்தாதி

2082:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று. (2) 1

 

2083:

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,

ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று

தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2

 

2084:

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்

பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,

நீயளவு கண்ட நெறி. 3

 

2085:

நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து

பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம்

ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,

ஆலமமர் கண்டத் தரன். 4

 

2086:

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைஇல் மறையுறையும் கோயில், – வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று. 5

 

2087:

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,

இன்று மறப்பனோ ஏழைகாள் – அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்

திருவரங்க மேயான் திசை. 6


2088:

திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்

திசையுங் கருமங்க ளெல்லாம் – அசைவில்சீர்க்

கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத

வண்ணன் படைத்த மயக்கு. 7

 

2089:

மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்

தியங்கும் எறிகதிரோன் றன்னை, – முயங்கமருள்

தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,

போராழிக் கையால் பொருது? 8

 

2090:

பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்

ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, – விரிதோட்ட

சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,

மாவடிவின் நீயளந்த மண்? 9

 

2091:

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில்

அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்

வுலகளவு முண்டோவுன் வாய்? 10

 

Leave a Reply