முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2092:

வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்

தாயவனை யல்லது தாம்தொழா, – பேய்முலைநஞ்

சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,

காணாகண் கேளா செவி. 11

 

2093:

செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ

புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், – அவியாத

ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,

ஏனமாய் நின்றாற் கியல்வு. 12

 

2094:

இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,

முயல்வார் இயலமரர் முன்னம், – இயல்வாக

நீதியா லோதி நியமங்க ளால்பரவ,

ஆதியாய் நின்றார் அவர். 13

 

2095:

அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,

இவரிவ ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த

மூர்த்தி யுருவே முதல். 14

 

2096:

முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய

நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,

பல்லார் அருளும் பழுது 15

 

2097:

பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி

அழுதேன் அரவணைமேல் கண்டு – தொழுதேன்,

கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்

அடலோத வண்ணர் அடி. 16

 

2098:

அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,

முடியும் விசும்பளந்த தென்பர், – வடியுகிரால்

ஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள்

ஊர்ந்தா னுலகளந்த நான்று 17

 

2099:

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்

தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை – ஊன்றி,

பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,

மருதிடைபோய் மண்ணளந்த மால். 18

 

2100:

மாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண்

டாலின் இலைத்துயின்ற ஆழியான், – கோலக்

கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்

திருமேனி நீதீண்டப் பெற்று. 19

 

2101:

பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,

செற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா

மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,

நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20

Leave a Reply