1ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி

முதற் பத்து 1 ஆம் திருமொழி

948

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

அவர்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1

 

949

ஆவியே. அமுதே. எனநினைந்துருகி

அவரவர்ப்பணை முலைதுணையா,

பாவியேனுணரா தெத்தனைபகலும்

பழுதும் போய் ஒழிந்தன நாள்கள்,

தூவிசேரன்னம் துணையொடும்புணரும்

சூழ்புனற்குடந்தையேதொழுது, என்

நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2

 

950

சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்

தெரிவைமாருருவமேமருவி,

ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்

ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,

காமனார் தாதைநம்முடையடிகள்

தம்மடைந்தார்மனத்திருப்பார்,

நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும்நாமம். 1.1.3

 

951

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி

வேற்கணார் கலவியே கருதி,

நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்

என்செய்கேன் நெடுவிசும்பணவும்,

பன்றியா யன்றுபாரகங்கீண்ட

பாழியா னாழியானருளே,

நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும்நாமம். 1.1.4

 

952

கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்

கண்டவாதிரிதந்தேனேலும்,

தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்

சிக்கெனத்திருவருள்பெற்றேன்,

உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்

உடம்பெலாம்கண்ணநீர்சோர,

நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்

நாராயணாவென்னும்நாமம். 1.1.5

 

953

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்

எனக்கரசு என்னுடைவாணாள்,

அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி

அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,

வம்புலாஞ்fசோலைமாமதிள் தஞ்சை

மாமணிக்கோயிலேவணங்கி,

நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.6

 

954

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்

இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,

கற்பகம்புலவர்களைகணென்றூலகில்

கண்டவாதொண்டரைப்பாடும்,

சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்

சூழ்புனற் குடந்தையே தொழுமின்,

நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்

நாராயணாவென்னும்நாமம். 1.1.7

 

955

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்

கருத்துளே திருத்தினேன் மனத்தை,

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை

பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,

செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்

செல்கதிக்குய்யுமாறெண்ணி,

நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்

நாராயணாவென்னும்நாமம். 1.1.8

 

956

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்

படுதுயராயினவெல்லம்,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடுபெருநிலமளிக்கும்,

வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற

தாயினு மாயினசெய்யும்,

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.9

 

957

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்

மங்கையார்வாள்ff கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை

இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்

துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு

நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10

Leave a Reply