10ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

பெரிய திருமொழி பத்தாம் பத்து

10ஆம் பத்து 1ஆம் திருமொழி

கலி விருத்தம்

1848

ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்

வருநல் தொல்கதி யாகிய மைந்தனை

நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்

கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1

1849

பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்

மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்

என்னை யாளுடை யீசனை யெம்பிரான்

றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 10.1.2

1850

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய

பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய்

மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்

ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 10.1.3

1851

துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்

பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்

அளப்பி லாரமு தையம ரர்க்கருள்

விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4

1852

சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்

நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்

உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்

விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 10.1.5

1853

வானை ஆரமு தம்தந்த வள்ளலை

தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்

ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்

கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 10.1.6

1854

கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்

மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய

வேந்த னைச்சென்று காண்டும்வெ· காவுளே 10.1.7

1855

பத்த ராவியைப் பான்மதி யை,அணித்

தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்

முத்தி னைமணி யைமணி மாணிக்க

வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 10.1.8

1856

கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்

கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை

கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்

நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 10.1.9

1857

பெற்றம் ஆளியை பேரில் மணாளனை

கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த

சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு

அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 10.1.10

Leave a Reply