திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

(செஞ்சுருட்டி ராகம் – ரூபக தாளம்)

852:
இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா,
வரர்தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்,
பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்,
நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே. (101)

853:
விள்விலாத காதலால் விளங்குபாத போதில்வைத்து,
உள்ளுவேன தூனநோயொ ழிக்குமாதெ ழிக்குநீர்,
பள்ளிமாய பன்றியாய வென்றிவீர, குன்றினால்
துள்ளுநீர்வ ரம்புசெய்த தோன்றலொன்று சொல்லிடே. (102)

854:
திருக்கலந்து சேருமார்ப. தேவதேவ தேவனே,
இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா,
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்,
உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே. (103)

855:
கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை,
இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே,
கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்,
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே. (104)

856:
மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி ரந்துகொண்ட ளந்து,மண்
கண்ணுளல்ல தில்லையென்று வென்றகால மாயினாய்,
பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை கொங்கைதங்கு பங்கயக்
கண்ண,நின்ன வண்ணமல்ல தில்லையெண்ணும் வண்ணமே. (105)

857:
கறுத்தெதிர்ந்த காலநேமி காலனோடு கூட,அன்
றறுத்தவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்,
தொறுக்கலந்த வூனமஃதொ ழிக்கவன்று குன்றம்முன்,
பொறுத்தநின்பு கழ்க்கலாலொர் நேசமில்லை நெஞ்சமே. (106)

858:
காய்சினத்த காசிமன்னன் வக்கரன்ப வுண்டிரன்,
மாசினத்த மாலிமாஞ்சு மாலிகேசி தேனுகன்,
நாசமுற்று வீழநாள்க வர்ந்தநின்க ழற்கலால்,
நேசபாச மெத்திறத்தும் வைத்திடேனெம் மீசனே. (107)

859:
கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்,
நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்,

வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ? குறிப்பிலே! (108)

860:
சுருக்குவாரை யின்றியேசு ருங்கினாய்சு ருங்கியும்,
பெருக்குவாரை யின்றியேபெ ருக்கமெய்து பெற்றியோய்,
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்ததேவ தேவனென்று,
இருக்குவாய்மு னிக்கணங்க ளேத்தயானு மேத்தினேன். (109)

861:
தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்,
மாய.நின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்,
நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்,
பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை வண்ணனே. (110)

Leave a Reply