மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா

ஆன்மிக கட்டுரைகள் சிவ ஆலயம் செய்திகள்

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி ஸ்ரீ கால பைரவருக்கு கால பைரவாஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்றன.

விழாவில் மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் செய்திருந்தார்.

mayiladuthurai bairavar mayiladuthurai bairavar1

Leave a Reply