விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
Bharathi theerthar
Bharathi theerthar

ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.

இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக வேதாந்த தத்வத்தை தெரிந்து கொள்வதற்கு வேண்டிய யோக்யதையையும் யோக்கியமான சிஷ்யன் தன் குருவினிடம் தத்வத்தை கேட்கும் முறையையும், அப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு சரியான முறையில் தத்வத்தை தெரியப்படுத்தும் நீதியையும் இந்த கிரந்தத்தில் கூறியிருக்கிறார்.

எங்கள் பரம குருவான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள், இந்த கிரந்தத்தின் மீது அழகான உரை எழுதி இருக்கிறார்.

அதன் மூலமாக இந்த கிரந்தத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். இந்த கிரந்தத்தின் பிரயோஜனத்தை ஸ்ரீ சங்கர பகவத் பாதர் அதன் கடைசி ஸ்லோகத்தில் சொல்லி இருக்கிறார்

மோக்ஷத்துக்கு வேண்டிய மார்க்கம் இந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த மார்க்கம் முக்கியமாக என்னவென்று பகவத் பாதர் சொல்லியிருக்கிறார்

மோக்ஷத்தில் விருப்பம் இருக்கிறவன் லௌகிகமான விஷயங்களை விஷத்தைப் போல் விட்டுவிட வேண்டும். திருப்தி, தயை, பொறுமை, நேர்மை, சாந்தி, கட்டுப்பாடு ஆகிய இவைகளை அம்ருதம் பருகுவது போல் கடைபிடிக்க வேண்டும்.

இந்த யோக்யதையை சம்பாதித்தவன் தான் மோக்ஷ மார்க்கத்தில் ஸஞ்சரிக்க முடியும் என்பது பொருள்.

இப்பேர்பட்ட பல சிறந்த விஷயங்களை கொண்ட இந்த விவேக சூடாமணியை, எல்லோரும் படித்து சிரேயவான்களாகட்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply