மதுரை கோயில்களில் டிச.20ல் ஆருத்ரா தரிசனம்: நடராஜர் அபிஷேகம்!

செய்திகள்
natarajar - 1

மதுரை: மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில் டிச. 20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடராஜர் அபிஷேகமும், ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவ ஆலயங்களில், நடராஜர் மற்றும் சிவபெருமான், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்க வாசகருக்கு பக்தர்களால், சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, சிறப்பு அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.

மதுரையில் மூக்தீஸ்வரன், மதுரை செல்லூர் திருவாப்புடையார், இம்மையில் நன்மை தருவார்,மதுரை மேலமடை தாசில்தார் சௌபாக்யா விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வரன், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், சோழவந்தான் பிரளயநாதர் கோயில்களில் திருவாதிரையையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Leave a Reply