இன்பத்திற்கு வழி: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

அம்பாளை அடைவதற்கும், இறைவனை அடைவதற்கும் வழி இருக்கிறதா? இருக்கிறது. நம் மனதை உள்ளே திருப்பிவிட வேண்டும்.

மனம் நமது பேச்சைக் கேட்க வேண்டும். நாம் மனதின் பேச்சைக் கேட்கக்கூடாது. மனது எங்கோ ஓடிக்கொண்டோ, பொருட்கள் பக்கம் போய்க்கொண்டோ இருந்தாலும் நாமும் அதன் பின்னே போய்க் கொண்டிருப்போம். அவ்வாறு செய்யக்கூடாது.

பகவான் நம் மனதை நல்வழியில் வைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளுடைய அனுக்ரஹத்தைப் பெற்று நமக்கு நற்புத்தி வரவேண்டும். நற்புத்தி வந்தால் நாம் நல்ல இன்பத்தைப் பெறலாம்.

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply