ஏலகிரி கல்யாண வேங்கடரமண ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு

செய்திகள்

கோயில் திருவாராதனம், பிரபந்த வேத சாற்றுமுறை, மங்களாசாஸனம் ஆகியவற்றுக்குப் பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தி வைக்கும் முன்னதாக வானத்தில் கருடன் வட்டமிட்டது. இந்நிகழ்வு, விழாவுக்கு வந்திருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்தக் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர்.

விழாவையொட்டி ஏலகிரி தாயார் அறக்கட்டளை மற்றும் சென்னை நியூ ஹோப் மருத்துவமனை சார்பில் ஏலகிரிமலை அத்தனாவூர் அரசு மேனிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றும் நடத்தப்பட்டது.

 

Leave a Reply