காரைக்கால் பார்வதீசுவர சுவாமி கோயிலில் சூரிய பூஜை

செய்திகள்

திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது. மழையில்லாத காலத்தில் கஷ்டப்பட்ட விவசாயிகளுக்காக மழையைப் பொழிய வைத்து, தாமே உழவனாக வந்து தரிசனம் தந்தார் சிவபெருமான்.  இத்தகைய சிறப்புக்கு உரிய கோயில் இது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 7 நாள்கள் மாலை வேளையில் சிவலிங்கத்தை சூரியன் வழிபடும் விதமாக சூரிய பூஜை நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது.

சிவலிங்கம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 5.50 மணியளவில் சூரியன் மறையும் நேரத்தில், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply