சிம்மகிரி நரசிம்மர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி

செய்திகள்

 சித்திரவடி கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு மலைமேல் ஆலயம் அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, காலை 6.30 மணி அளவில் யாகசாலை 108 கலச பூஜை, 8 மணிக்கு மூலவர் திருமஞ்சன வைபவம், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேணுகோபால பெருமாள் அறக்கட்டளை செய்துள்ளது.
 மேலும் விவரங்களுக்கு: 94432 40074.

Leave a Reply