

கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே
என்று கூறுகிறார். அதாவது, ஞானத்திற்கு சமானமான பரிசுத்தம் செய்யும் பொருள் எதுவும் இல்லை என்பது இதன் அர்த்தம்.
இங்கு “ஞானம்” என்னும் வார்த்தை லெளகிக அறிவைக் குறிக்கவில்லை. பரமாத்மாவைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது.
ஆகவே, மனிதனாகப் பிறந்தவர் எதையாவது ஸம்பாதிக்க வேண்டியிருந்தால் அது இந்த பரமாத்ம ஞானமேயல்லாது வேறெதுவும் இல்லை.
மனிதனின் அனைத்து முயற்சிகளும் இந்த ஈச்வர ஸாக்ஷாத்காரத்தை அடைவதற்கே செய்யப்பட வேண்டும்.
நிரந்தர செல்வம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.