இன்று குரு பூர்ணிமா: ஞானவாசல் திறக்கும் திறவுகோல்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

viyasar 1
viyasar 1
viyasar 1

இன்று வியாச மகரிஷியின் அவதாரத் திருநாள். விஷ்ணுவின் அம்சம் என கருதப்படும் வியாச மகரிஷி குரு பூர்ணிமா அன்று துவாபர யுகத்தில் அவதரித்தார்..அவர் தனது அன்னையின் கருவில் இருந்தபோதே அவர் தந்தை பராசர முனிவர் மகாபாரதம் இவ்வாறு நிகழப் போகிறது என்பதை அவருக்கு உபதேசித்தார் என்பது ஒரு வரலாறு. அவரைப் பற்றிய சில குறிப்புகள்:

வியாசர், தாறுமாறாக இருந்த வேதத்தை ஒழுங்கு படுத்தி, ரிக் , யஜுஸ் , ஸாம , அதர்வ என்ற சதுர் மறைகளாக்கி , ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும் நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேதவ்யாஸர் என்றே அழைக்கப் படுகிறார். வ்யாஸர் என்றால் தொகுப்பாளர் (Composer) என்று பொருள்.

வியாசர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுக முனிவரின் தந்தையும் ஆவார்:

வ்யாஸம் வஸிஷ்ட நஃதாரம்
சக்தேஃ பௌத்ரம் அகல்மஷம்।
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்

வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:

வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணவே।
நமோவை ப்ரஹ்ம நிதயே
வாசி’ஷ்டாய நமோ நம:।।

வியாசர் க்ருஷ்ண த்வீபம்‌ என்ற இடத்தில் பிறந்ததால் இவரை “க்ருஷ்ண த்வைபாயனர்” “த்வைபாயனர்” என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

வேத வியாசர்’ எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் ‘வேதவியாசர்’ என்றழைக்க‌ப்பட்டார்.

வியாசர், நால் வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே.‌ அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார்.

நம் நாட்டு இரட்டை இதிஹாஸங்களான ராமாயணம் வால்மீகி முனிவராலும், மஹாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப் பட்டவை. ராமாயணம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால், மஹாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 100,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால் எவ்வளவு பெரிய சாதனை என்று மலைக்கத் தோன்றுகிறது அல்லவா?

ப்ரஹ்ம ஸூத்ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களின் தோற்றுவாய் ஆகும்.

viyasar - 1

வியாசர் முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும் கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

வியாசருக்கு எவ்வளவு பெரிய மகத்துவத்தைத் தந்துள்ளனர் என்றால், அவரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன், அவரை “ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்” என்று போற்றுகின்றனர் :

அசதுர்முகயத் ப்ரஹ்மா
அசதுர்புஜ விஷ்ணவே
அபால லோசனஃ சம்பு
பகவான் பாதராயண:।।

தேஹிமே குரு ஸ்மரணம் | தேஹிமே குரு கீர்த்தனம் | தேஹிமே குரு தர்ஷணம் | தேஹிமே குரு ஸாமீப்யம் | தேஹிமே குரு பதஸேவனம் |தேஹிமே குரூபதேசம் | தேஹிமே குரு ஸாயுஜ்யம் |

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது…

வேதவியாசரை . பூர்ணிமா தினத்தில், துறவிகள் பூஜித்து, ‘சாதுர்மாஸ்ய விரதம்’ துவங்குகின்றனர். ஆகவே, இது ‘வியாச பூஜை’ தினமாக சிறப்பு பெறுகிறது.

வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.

வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.

‘முனிவர்களில் நான் வியாசர்’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் அருளியிருக்கிறார்.

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: ||
(கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்)

வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப் பிரம்மரிஷியாவார்.

bharathi - 2

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீசுகப்பிரம்மரிஷிக்கு ‘வியாச பூஜை’ யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்படதொடங்குகின்றனர். ஆஷாட பௌர்ணமி, ஆஷாட சுத்த பௌர்ணமி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமி தினத்தன்றே, ஸ்ரீவியாச மஹரிஷியின் திருஅவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமை தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர்

சன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசிகள், இக்காலத்தில் சஞ்சாரம் செய்யும் போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, ‘சாதுர்மாஸ்ய விரதமாக’ அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதிகுருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே,இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும். சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.

சன்யாசிகள் மட்டுமல்லது, சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

guru 1 - 3

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் ஆகியவை மிகச் சிறந்தது.

viyasar mahabharatham - 4

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

குடிசைகளில் தங்கி இருந்து சந்நியாச ஆசிரமத்தைக் கடைப்பிடிப்பவர்களைக் “குடீசர்கள்” என அழைப்பார்கள்.

துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

guru paramparai - 5

நீர் அதிகம் உள்ள நதிக்கரைகளில் வாழும் துறவிகளை “பஹூதகர்கள்”என அழைப்பார்கள். இவர்கள் பிக்ஷை எடுத்தே உண்ணுவார்கள். அடிப்படையில் சந்நியாச ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் ஒன்றே என்றாலும் நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு.

அடுத்துப் பரிவ்ராஜகர்கள்! இவர்கள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் பரிபூரணப் பக்குவ ஞானம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரே ஊரில் தங்குவதும் அங்குள்ள மக்களுக்குப் போதிப்பதும் இவர்கள் வரை சரியானது அல்ல. ஒரே இடத்தில் தங்கினால் அந்த மக்களிடம் பற்றோ, பாசமோ ஏற்பட்டு விடும் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் குரு, சிஷ்ய பரம்பரையில் தான் வந்திருப்பார்கள்.

பொதுவாக சந்நியாசிகள் மூன்று நாட்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்கக் கூடாது என்பார்கள். என்றாலும் இந்தச் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்தால் மட்டும் ஒரே இடத்தில் தங்குவார்கள். ஏனெனில்இவர்கள் மழைக்காலங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது. மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதிய செடிகள், துளிர்கள் முளைத்துவரும். புழுக்கள், பூச்சிகள் நிறையக் காணப்படும். இவற்றை மிதிக்காமல் நடக்க வேண்டி இருக்கும். சாலைகளின் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கூடப் புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவை மறைந்திருக்கலாம்.

எவ்வுயிர்க்கும் இல்லல் விளைவிக்காவண்ணம் அஹிம்சை என்பதைப் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பதே சந்நியாச யோகத்தில் முக்கியமானது. ஆகவே சந்நியாசிகளும், துறவிகளும், பரிவ்ராஜகர்களும் இந்த நான்கு மாதங்களில் ஒரே இடத்தில் தங்கித் தங்கள் விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

guru poornima - 6

குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும்.
அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும்பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிக்க்ஷைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.

‘கு’ என்பது ஒரு சமஸ்கிருத மூலமாக இருப்பது அறியாமை அல்லது இருளைக் குறிக்கிறது மற்றும் ‘ரு’ என்பது அந்த இருளை அகற்றும் நபரைக் குறிக்கிறது. ஆகவே, குரு பூர்ணிமாவின் இந்த நாளில்தான் உங்கள் குருவுக்கு உங்கள் மரியாதை அனைத்தையும் காட்டி அவருடைய ஆசீர்வாதங்களை அடையலாம். கல்வி மற்றும் ஆன்மீக ஆசிரியர்களுக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட நாள் இது. மேலும், இந்த புனித நாள் தியானத்திற்கு சிறந்தது என்றும் யோக சாதனங்களைச் செய்வதற்கும் சிறந்தது என்றும் கருதப்படுகிறது.

குரு பூர்ணிமாவின் இந்த நாள் அதனுடன் இணைக்கப்பட்ட விஷ்ணு பூஜைக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்த நாளில் விஷ்ணுவிடம் உங்கள் பிரார்த்தனைகளை வழங்குவதற்கான சிறந்த வழி, விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களான விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஓதுவதுதான்

நீங்கள் குருவுடன் நடக்கும்போது, ​​அறியாமையின் இருளிலிருந்து விலகி, இருப்பு வெளிச்சத்தில் நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்.உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, வாழ்க்கையின் உச்ச அனுபவத்தை நோக்கி நகருங்கள்.”

ஒழுக்கமற்ற மனதைப் போல கீழ்ப்படியாத ஒன்றும் இல்லை, ஒழுக்கமான மனதைப் போல கீழ்ப்படிதலும் எதுவுமில்லை” –

viyasa puja - 7

ஒரு குருவின் அருள் ஒரு சமுத்திரம் போன்றது. ஒருவர் ஒரு கோப்பையுடன் வந்தால், அவருக்கு ஒரு கப்ஃபுல் மட்டுமே கிடைக்கும். கடலின் அசிங்கத்தைப் பற்றி புகார் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. பெரிய கப்பல், அதிகமானவை முடியும் எடுத்துச் செல்லுங்கள். இது முற்றிலும் அவரிடம் உள்ளது. “

ஒரு நல்ல ஆசிரியர் நம்பிக்கையைத் தூண்டலாம், கற்பனையைத் தூண்டலாம் மற்றும் கற்றல் ஆர்வத்தைத் தூண்டலாம். ஒருவராக இருப்பதற்கு நன்றி!”

ஒருவர் உண்மையான குருவைக் கண்டால், ஒருவர் பாதி உலகை வெல்வார். என்னை உங்கள் சீடராக அழைத்துச் சென்றதற்கு நன்றி!

ஒரு ஆசிரியர் ஒருபோதும் சத்தியம் கொடுப்பவர் அல்ல. அவர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார், ஒவ்வொரு மாணவரும் தனக்குத் தானே கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்கு ஒரு வழிக்காட்டி”

guru paramparai 1 - 8

‘குரு’ என்பது ஒரு போதகரின் மரியாதைக்குரிய பதவி, இது தெய்வீக சக்தியின் வாகனமாக கருதப்படுகிறது, எனவே அவருடைய சீடர்களிடமிருந்து மிகவும் மறைமுகமான கீழ்ப்படிதலைப் பெற உரிமை உண்டு. குருக்கள், பொதுவாக, பண்டைய இந்தியாவில் சமுதாயத்தின் முதல் மற்றும் மிகவும் சிறப்பான வரிசையாக உள்ளனர். வேத மரபில், குரு ஒரு கடவுளுக்குக் அடுத்தப்படியாகக் கருதப்படுகிறார். அடிப்படையில், குரு ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கிறார், சீடரை ‘கடவுள்-உணர்தல்’ பாதையில் வழிநடத்துகிறார். சாராம்சத்தில், குரு தனது சீடர்களின் மனதை வெளிச்சமாக்கும் புனித குணங்களைக் கொண்ட மரியாதைக்குரிய நபராகக் கருதப்படுகிறார்.

குரு கீதையில், குருவின் வடிவத்தை தியானிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; குருவின் பாதங்களை வணங்க வேண்டும்; அவரது வார்த்தைகள் ஒரு புனிதமான மந்திரமாக கருதப்பட வேண்டும்; அவருடைய கிருபை இறுதி விடுதலையை உறுதி செய்கிறது

ஆன்மீக ஆர்வலர்கள் இந்த நாளில் பிரம்மமுஹூர்த்தத்தில் (4 00.) எழுந்து குருவை தியானித்து அவரது மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவருடைய அருளுக்காக அவர்கள் அவரிடம் பிரார்த்திக்க வேண்டும்.

guru - 9

குருவின் புத்தகங்கள் அல்லது எழுத்துக்களைப் படிக்கலாம் அல்லது அவரது போதனைகளை மனரீதியாகப் பிரதிபலிக்கலாம். குருவின் வழிபாட்டின் சிறந்த வடிவம் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதும் அவருடைய மகிமையைப் பரப்புவதுமாகும்.

உபநிடதங்கள் குருவின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. உயர்ந்த கடவுளை உணர வேண்டும் என்று முண்டக் உபநிஷத் கூறுகிறது; வேதங்களின் ரகசியங்களை அறிந்த குருவின் முன் ஒருவர் சரணடைய வேண்டும். சீடரை ஆன்மீக பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரு போதகராக குருவைப் பற்றி கத்தோபனிஷாத் பேசுகிறார்.

ramanujar 1
ramanujar 1

தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு, குருவின் நிறுவனம் இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு கொள்கைகளை உருவாக்கி ஆன்மீக மற்றும் அடிப்படை அறிவை பரப்பியுள்ளது. குருக்கள் பண்டைய கல்வி முறையின் அச்சை உருவாக்கினர், மேலும் அவர்கள் படைப்புச் சிந்தனையால் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு துறைகளை வளப்படுத்தினர்.

குருவுக்கும் சீடருக்கும் இடையிலான உறவு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கயான் (ஆன்மீக அறிவு) மற்றும் சாதனா (ஆன்மீக பயிற்சி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இயற்கையில் முற்றிலும் ஆன்மீகம் கொண்டது. ஒருவரின் ஆன்மீக பயணத்தில் ஒரு வழிகாட்டி தேவை, அவர் / அவள் ஒரு குறிப்பிட்ட துறையில் அதிகாரமாக இருக்க வேண்டும். ஆன்மீகத் துறையில் அதிகாரம் கொண்ட ஒரு நபர் குரு என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒருவர், அவருடைய ஆன்மீக வழிகாட்டியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்கனவே ஆன்மீக பாதையில் நடந்து, யுனிவர்சல் மனம் மற்றும் புத்தி அணுகலை பெற்றவர்.

குரு தனது சீடர்களை அவர்களின் ஆன்மீக நிலை மற்றும் அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார். இந்த திறன்கள் அனைத்தும் ஒரு நல்ல தேடுபவராக இருப்பதற்கு உள்ளார்ந்தவை, நமது ஆன்மீக பயணத்தைத் தக்கவைத்துக்கொள்ள முக்கியம்.

முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் “குரு பூர்ணிமா “. முழுமையை உணர்த்தும் பௌர்ணமி அன்று இருக்கும் உயிர் கூட இறைநிலையை நோக்கி உயர்த்தக் கூடியது இந்த திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும் குரு பூர்ணிமா தனி மனிதன் குருவின் வழிகாட்டுதலை துவங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைகிறார்கள்.

athi sankarar
athi sankarar

ஆன்மீகத்தில் ஒரு பழமொழி உள்ளது இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது என்பதாகும். இதனை கூர்ந்து நோக்கினால் குருவின் வலிமை தெரியும்..

த்யான மூலம் குரோர் மூர்த்தி
பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ரமூலம் குரோர் வாக்யம்
மோக்ஷமூலம் குரோக்ருபா!’

தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’

இந்த நன்னாளில் நாம் நம் குருமார்களுக்கு நம் மரியாதையை செலுத்தி குருவின் திருப்பாதங்களை இறுக பற்றுவோம்..இந்த குரு சிஷ்ய பரம்பரை இன்னும் தொடர்த்து வர நம் குழந்தைகளுக்கும் தத்தமது குருமார்களை அடையாளம் காட்டுவோம்….

பகவத் கீதைஅருளிய
கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர் , உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்

ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெற்று மகிழ்வோம்.

மஹர்ஷி வியாசரின் அவதார தினத்தில் அவரை நன்றியுடன் நினைவு கூர்வது, நம் நாட்டுப் பாரம்பரியங்களை மதிக்கும், நம் அனைவரது கடமையுமாகும்.

இனிய குரு பூர்ணிமா வாழ்த்துகள்!

இன்று குரு பூர்ணிமா: ஞானவாசல் திறக்கும் திறவுகோல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply