2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

புத்தாண்டு பலன்கள் – 2011

 

https://www.dinamani.com/edition/astview.aspx?sid=newyear&ast=1

மேஷம் :

2011ஆம் ஆண்டு,​​ ஆங்கிலப் புத்தாண்டில்,​​ ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உங்களின் பணிகளை அதிகார தோரணையுடன் செய்து வெற்றி வாகை சூடுவீர்கள்.​ உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள்,​​ உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.​ சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைத் தேடிப் பெறுவீர்கள்.​ வெளிவட்டாரத்தில் உங்களின் புகழும்,​​ செல்வாக்கும் உயரும்.​ அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கிடைக்கும்.​ உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள்.​ யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து புதிய பலம் பெறுவீர்கள்.​ ​

தைரிய ஸ்தான கேது பகவானின் அருளால்,​​ சில சந்தர்ப்பங்களில் அசட்டுத் துணிச்சலுடன் நீங்கள் செய்யும் காரியங்களும் சரியாக முடிந்துவிடும்.​ சகோதர,​​ சகோதரிகள் மற்றும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.​ உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.​ ​ தத்துப்பிள்ளையாக பிறர் வீட்டிற்கு வந்தவர்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து திடீரென்று சொத்துக்கள் கிடைக்கும்.

குரு பகவானின் அருளால் வெளியூர் பயணம் செய்து நன்மைகளைப் பெறுவீர்கள்.​ அதேநேரம் இந்தக் காலகட்டத்தில் கர்வத்தை விட்டொழித்து நேர்மையாக நடந்து கொள்ளவும்.​ உற்றார்,​​ உறவினர்களிடம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும்.​ குழந்தைகளை அனாவசிய கேளிக்கைப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுத்த வேண்டாம்.​ அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளவும்,​​ பெரியோரிடம் பாராட்டுகள் பெறவும் வழிகளை ஏற்படுத்தவும்.

இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் தனித்திறமை வெளிப்படும்.​ சுதந்திரமாகச் செயல்பட்டாலும் அனைவரின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள்.​ சிறிது கடினமாகப் பேசினாலும் சூழ்நிலையை அறிந்து பேசுவீர்கள்.​ பொருளாதாரம் சீராக இருக்கும்.​ சிலருக்குப் பழைய வீட்டை வாங்கி ‘கிரகப் பிரவேசம்’ செய்யும் பாக்கியமும் உண்டாகும்.​ சரியான முடிவுகளை எடுத்தாலும் அதைப் பற்றி அனுபவஸ்தர்களிடம் கலந்து ஆலோசிப்பீர்கள்.​ ஒரு காலத்தில் உங்களுக்கு உதவியர்களுக்கு நீங்கள் உதவும் காலகட்டம் இது.​ அதே சமயம் சிலர்,​​ சில நேரங்களில் வறட்டுப் பிடிவாதம் கொள்வீர்கள்.​ மேலும் மறைமுக எதிர்ப்புகளையும்,​​ போட்டிகளையும் சந்திக்க நேரிடலாம்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவீர்கள்.​ அலுவலக ரீதியாகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உங்களைத் தேடி வரும்.​ வருமானம் திருப்திகரமாக இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது.​ நீங்கள் வாழும் பகுதியிலேயே மனதிற்கு இனிய பணி மாற்றங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து கொடுக்கல்,​​ வாங்கலில் லாபம் அடைவீர்கள்.​ எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்,​​ அதிலிருந்து விடுபடுவார்கள்.​ வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வாகனங்களை வாங்குவீர்கள்.​ சரளமான பண வசதி இருப்பதால் புதிய பொருட்களை வாங்கி விற்க முயற்சி செய்வீர்கள்.​ கடையையும் அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

விவசாயிகளுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும்.​ மகசூலில் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.​ வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும்.​ அதேநேரம் பூச்சி,​​ புழுக்களால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும்.

அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.​ எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.​ பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.​ உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும்.​ அதனால் வாழ்க்கைத் தரம் உயரும்.​ அதேசமயம் கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையும் என்பதால் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.​ நிதானமாகவும்,​​ பொறுமையுடனும் நடந்துகொண்டு வெற்றிப் பாதையை எட்டுவீர்கள்.​ சிறிது தாமதம் ஏற்பட்டாலும் வர வேண்டிய பணம் வந்து சேரும்.​ அதேசமயம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் உங்கள் மீது சற்று அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.​ அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

பெண்மணிகளுக்கு நினைத்தவை நிறைவேறும்.​ குடும்பத்தில் உங்கள் மதிப்பு,​​ மரியாதை அதிகரிக்கும்.​ உற்றார்,​​ உறவினர்களை அன்புடன் நடத்துவீர்கள்.​ உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து,​​ மேலும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.​ பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும்.​ குல தெய்வ ப்ரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள்.​ குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.​ நல்ல மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைப்பீர்கள்.​ புதிய மொழிகளைக் கற்கவும் ஆர்வம் உண்டாகும்.​ உற்சாகமுடன் இருக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.​ அதே நேரம் விதண்டாவாதம் செய்யும் நண்பர்களுடன் சேர வேண்டாம்.​ போராட்டங்களிலிருந்தும் ஒதுங்கியிருங்கள்.

பரிகாரம் :​​ இந்த ஆண்டு முழுவதும் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்யவும்.​ நந்தி பகவானுக்கு அருகம் புல் மாலை அணிவிக்கவும்.

Leave a Reply